“பசில் ராஜபக்ஷ மீண்டும் பாராளுமன்றத்திற்கு வந்து பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்த முழு ஒத்துழைப்பை வழங்குவார் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்” – டிலான் பெரேரா

“பசில் ராஜபக்ஷ மீண்டும் பாராளுமன்றத்திற்கு வந்து பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்த முழு ஒத்துழைப்பை வழங்குவார் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்”  என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(03.11.2020) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள டிலான் பெரேரா ,

“பசில் ராஜபக்ஷ பாராளுமன்றத்திற்கு வருவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் விருப்பம் தெரிவிப்பதை போன்றே வெளியில் உள்ளவர்களும் விருப்பத்துடன் உள்ளனர். ஆனால் அதனை அவரே தீர்மானிக்க வேண்டும். எனினும் அவர் பாராளுமன்றத்திற்கு வந்து பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்த முழு ஒத்துழைப்பை வழங்குவார் என்ற நம்பிக்கை நாட்டு மக்களில் கட்சி பேதமின்றி அனைவரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் செயலணியில் சுயேற்சையாக முன்னின்று தற்போது செயற்பட்டு வருகின்றார். நாட்டில் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் செயற்த்திட்டங்களில் முன்னின்று செயற்பட்டு வருகின்றார். கோட்டாபய ராஜபக்ஷவின் இரட்டை பிரஜாவுரிமை பிரச்சினை காணப்பட்டபோது, அவருக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அப்போது கோட்டாபய ராஜபக்ஷவை பூதாகரமாக காட்டினார்கள் தற்போது பசில் ராஜபக்ஷவை பூதாகரமாக காட்ட முயல்கின்றார்கள்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *