யாழ்ப்பாணம் – மந்துவில் மேற்கு கொடிகாமம் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். குறித்த நபர் நேற்று(01.11.2020) காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
23 வயதான சி.வினோதன் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவருடைய மனைவி வெளிநாடொன்றில் வசித்து வரும் நிலையில் இச் சம்பவம் மந்துவில் மேற்கு கொடிகாமம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
தமிழர் பகுதிகளில் தற்கொலைகளும் வேகமாக பரவும் நோய்களை போல மலிந்து போய்விட்டது. காதல் தோல்வி, குடும்பப்பிரச்சினை, பெறுபேறுகள் போதாமை, கடன் பிரச்சினை என பல காரணங்கள் இந்தத்தற்கொலைகளின் பின்னணியாக காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
தமிழர் பகுதிகளில் தொடரும் தற்கொலைகள் தொடர்பான பின்னணியை மையப்படுத்தி எழுதப்பட்ட கட்டுரையை காண இங்கே அழுத்தவும்
( http://thesamnet.co.uk/?p=65967 )