“நான் பணிபுரியும் முறையை முதலில் பாருங்கள். அதனைத் தொடர்ந்து நான் பணிபுரியும் முறையைப் பார்த்து குற்றச்சாட்டுகளைச் முன்வையுங்கள்“ என பிரதமரின் பணியாளர் சபை பிரதானியும் பிரதமர் மகிந்தராஜபக்ஸவின் மகனுமாகிய யோஷித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அரசியல் பழிவாங்கல் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்துவரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியதனை தொடர்ந்து , ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, யோஷித ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது,
“பிரதமரின் பணியாளர் சபை பிரதானி பதவி, சட்டப்பூர்வமாகவே வழங்கப்பட்டது. இதேவேளை நான் 2016ல் இராணுவத்தால் இடைநீக்கம் செய்யப்பட்டேன். நான் விசாரணை இல்லாமல் இடைநீக்கம் செய்யப்பட்டேன். எனவே, அந்த நேரத்தில் நான் என் தந்தைக்கு வேலை செய்தேன். எனவே அந்த பயிற்சியால், எனக்கு 4 ஆண்டுகளுக்குப் பிறகு வேலை கிடைத்தது. எனவே நான் அங்கு இருக்க வேண்டும் என்று அவர் நினைத்தார்.
மேலும், நாங்கள் நல்லது செய்தாலும் கெட்டது செய்தாலும் சரி, சமுதாயத்திற்கு ஏதாவது சொல்ல வேண்டும். நல்லது அல்லது கெட்டது என்பதை சமூகம்தான் தீர்மானிக்கிறது. நான் பணிபுரியும் முறையைப் முதலில் பாருங்கள். அதனைத் தொடர்ந்து நான் பணிபுரியும் முறையைப் பார்த்து குற்றச்சாட்டுகளைச் முன்வையுங்கள்.
அத்துடன் நான் இன்னும் பதவியேற்று ஒரு வாரம் கூட இல்லை. ஆகவே ஒரு வருடத்திற்கு பின்னர் எதனையும் என்னிடம் கேளுங்கள்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமரின் பணியாளர் சபை பிரதானியாக அண்மையில் யோஷித ராஜபக்ஷ பணிக்கமர்த்தப்பட்டிருந்த நிரைலயில் அது தொடர்பாக சிலர் தங்களுடைய அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையிலேயே யோஷித ராஜபக்ஸ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.