பிரதமர் பணியாளர்சபை பிரதானியாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ நியமனம் !

இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பணியாளர் சபை பிரதானியாக அவரது மகன் யோஷித ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இலங்கைக்கான பதில் சீன தூதுவர் ஹுவெய், அண்மையில் யோஷித ராஜபக்ஷவை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளதாக தூதரகத்தின் டுவிட்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலில் இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்ட சீனாவின் உயர்மட்ட தூது குழுவினர் மற்றும் இலங்கைக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பிலும் இரு தரப்பு நட்பு தொடர்பிலும் கலந்துரையாடல் மேற்கொண்டதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கைப்பிரதமர் மகிந்தராஜபக்ஸவின் இன்னுமொரு மகனான நாமல்ராஜபக்ஸ இலங்கையினுடைய விளையாட்டுத்துறை அமைச்சராக கடமையாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *