“தற்போது உக்கிரமடைந்து வரும் கொரோனா தொற்றுக்கு மத்தியில், நாட்டை முடக்கும் எண்ணம் இல்லை“ என ஊடகத்துறை அமைச்சரும் ஊடகத்துறை பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
கொரோனாவுடன் வாழப்பழகிக் கொள்ள வேண்டியது அவசியம் எனவும் மேலும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக பிரதம தொற்று நோயியல் தடுப்பு பிரிவு நிபுணத்துவ வைத்திய நிபுணர் டொக்டர் சுதத் சமரவீர ‘கொரோனா வைரஸ் தொற்று அச்சம் உலகம் முழுவதும் காணப்படுவதாகவும் அதனை இலங்கையில் மாத்திரம் கட்டுப்படுத்தி முழுமையாக ஒழிக்க முடியாது என தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.