வடக்கு- கிழக்கில் சிறுபான்மையினருக்கு எதிராக அரசினால் முன்னெடுக்கப்படும் அடக்கு முறைக்கு எதிராக, ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் இடம்பெறும் முழு கடையடைப்பு போராட்டத்திற்கு வவுனியாவில் தமிழ், இஸ்லாமிய வர்த்தகர்கள் பூரண ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.
வவுனியா நகர்ப்பகுதியில் குவிக்கப்பட்ட பொலிஸார், வர்த்தக நிலையங்கள் ஒவ்வொன்றாக சென்று திறக்குமாறு தெரிவித்து வருகின்றனர். மேலும் கடைகளை திறக்காதவபிடத்து தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கடையடைப்பில் ஈடுபட்டவர்களுக்கு பொலிஸார் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதே நேரத்தில் ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க வடக்கு கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பூரண கர்த்தாலுக்கு கிளிநொச்சி மாவட்ட வர்த்தகர்கள், கல்வி சாரா ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் தங்கள் பூரண ஆதரவினை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.