பிரித்தானியாவில் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாகவும் ஆறாயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் பிரித்தானியாவில் ஆறாயிரத்து 634பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 40பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரித்தானியாவில் வைரஸ் தொற்று பரவியதற்கு பிறகு பதிவான இரண்டாவது நாளொன்றுக்கான அதிகப்பட்ச பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும். முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி (7,860பேர்) வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட 14ஆவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், நான்கு இலட்சத்து 16 ஆயிரத்து 363பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 41ஆயிரத்து 902பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 228பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.