அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றமை வாழ்நாள் கௌரவம் என ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக ஜோ பைடன் உத்தியோகபூர்வமாக பெயரிடப்பட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 3ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளரும், தற்போதைய அமெரிக்க ஜனாதிபதியுமான டொனால்ட் ட்ரம்ப்பை எதிர்த்து ஜோ பைடன் போட்டியிடவுள்ளார்.
ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் மூன்றாவது சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது.
இந்த நிலையில், இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றிலேயே ஜோ பைடன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பது தமது வாழ்நாளில் கிடைத்துள்ள மிகப்பெரிய கௌரவம்“ என அவர் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ள நிலையில் அடுத்த ஜனாதிபதி யார்..? என்ற ஆவல் அனைவரிடமும் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.