தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 1700 ரூபா சம்பளம் வழங்க கம்பெனிகள் இணக்கம் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 1700 ரூபா சம்பளம் வழங்க 7 தோட்ட நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஜீவன் தொண்டமானினால் ஏற்பாடு செய்யப்பட்ட கண்டி மாவட்ட தோட்டத் தொழிலாளர் சங்கங்கள் மற்றும் இளைஞர் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது தொழிலாளர் அமைச்சு தனது கீழ் உள்ளதால் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்குத் தேவையான விசேட சட்டங்களை முன்வைப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும், இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக எதிர்வரும் திங்கட்கிழமை சம்பளச் சபையைக் கூட்டவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *