இலங்கையர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள போலந்து!

இலங்கைத் தொழிலாளர்களுக்கு குறிப்பிட்ட சில துறைகளில் தொழில் வாய்ப்பினை வழங்குவதற்கு போலாந்து அரசு கவனம் செலுத்தி வருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அண்மையில் போலாந்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் அலி சப்ரி, தனது X தளத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த பதிவில்” இரு நாடுகளுக்கும் இடையிலான உடன்படிக்கையின் கீழ் இந்த வேலைவாய்ப்புகள் வழங்கப்படவுள்ளன எனவும் இலங்கையர்கள் போலந்திற்குள் நுழைவதற்கான விசா வசதிகளை தளர்த்துவது குறித்து இச்சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.

 

அத்துடன் போலாந்தின் வெளிவிவகார அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பதாகவும், அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *