தேர்தல் காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களால் வழங்கப்படுகின்ற வாக்குறுதிகள் கட்டாயம் நிறைவேற்றப்பட வேண்டும் – புதிய சட்டமூலம் கோரி கையெழுத்து!

தேர்தல் காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களால் வழங்கப்படுகின்ற வாக்குறுதிகள் கட்டாயம் நிறைவேற்றப்பட வேண்டும் என வலியுறுத்தி கையெழுத்து பெறும் வேலைத் திட்டமொன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது.

தேசிய மீன ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் பிரதான பேருந்து நிலையத்திற்கு முன்பாகவும், அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் கையெழுத்துக்கள் பெறப்பட்டன.

தேர்தல் காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்படும் வாக்குறுதிகள் வழக்கமாக நிறைவேற்றப்படுவது இல்லை என்றும் எனவே

அவ்வாறான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான சட்டமூலம் ஒன்று நாடாளுமன்றத்தில்; இயற்றப்பட வேண்டும் என தேசிய மீன ஒத்துழைப்பு இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

தேர்தல் காலங்களில் அரசியல்வாதிகள் பொய் வாக்குறுதிகள் வழங்கப்படுவதாகவும் அதனால் பொதுமக்கள் ஏமாற்றப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதற்கு நாட்டில் புதிய சட்டம் ஒன்று அவசியம் என்றும்

இதனை வலியுறுத்தி கையெழுத்து பெறும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து இந்த வேலைத்திட்டம் நாட்டிலுள்ள 17 மாவட்டங்களில் முன்னெடுக்கப்படும் என்றும் தேசிய மீன ஒத்துழைப்பு இயக்கம் தெரிவித்துள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *