ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கை குறைபாடுடையது பக்கச்சார்பானது சுயமாக உருவாக்கியது – ஜெனீவாவிற்கான இலங்கை தூதுவர் ஹிமாலி அருணதிலக

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளிற்கான ஆணையாளர் அலுவலகம் இலங்கை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கை குறைபாடுடையது பக்கச்சார்பானது சுயமாக உருவாக்கியது என ஜெனீவாவிற்கான இலங்கை தூதுவர் ஹிமாலி அருணதிலக சாடியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோக்கெர் டேர்க்கிற்கு அறிக்கை குறித்து கடிதமொன்றை எழுதியுள்ள அவர் அந்த கடிதத்தில் இந்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணை எதுவும் இல்லாத நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் இலங்கை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளதை தேவையற்ற ஒரு தலைப்பட்சமான முயற்சி என  இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நிலைப்பாட்டினை கருத்தில் கொள்ளாமல் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை இது என தெரிவித்துள்ள இலங்கை தூதுவர் இந்த அறிக்கையை மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் வெளியிட்டமைக்கான நோக்கம் என்னவென கேள்வி எழுப்பியுள்ளார் என வெளிவிவகார அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலக அறிக்கை தவறானது என தனது கடிதத்தில் தெரிவித்துள்ள ஜெனீவாவிற்கான இலங்கை தூதுவர் ஹிமாலி அருணதிலக பக்கச்சார்பின்மை புறநிலை மற்றும் தேர்ந்துஎடுக்காமை ஆகிய கொள்கைகளின் அடிப்படைகளிற்கு இந்த அறிக்கை முரணாணது என் தெரிவித்துள்ளார் என விடயமறிந்த வெளிவிவகார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கை அரசாங்கம்நல்லிணக்கத்திற்கான தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ள தருணத்தில் இந்த அறிக்கை பக்கச்சார்பானது அரசியல் மயப்படுத்தப்பட்டது சுயமாக உருவாக்கப்பட்டது என ஜெனீவாவிற்கான இலங்கை தூதுவர் சாடியுள்ளார்.

இலங்கையின் ஆயுதமோதல் முடிவிற்கு கொண்டுவரப்பட்டு 15 வருடங்கள் பூர்த்தியாகிய தருணத்தில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது எனது தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *