ஒன்லைன் விசாவை வழங்கிய இந்திய அதிகாரிகள் தொடர்பில் விசனம் வெளியிட்ட இளைஞனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் டிரன் அலஸ்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒன்லைன் விசாவை இந்திய அதிகாரிகள் வழங்கியமையால் ஏற்பட்ட குழப்பம் தொடர்பில் இலங்கை இளைஞன் கடும் கோபமாக பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டிருந்தது.

இந்நிலையில், விசா வழங்கும் பிரிவில் குழப்பத்தை ஏற்படுத்திய இளைஞனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் (Tiran Alles) தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கடந்த மே மாதம் முதலாம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் தேவையற்ற விதத்தில் நடந்து கொண்ட இளைஞன் விமான நிலையத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

சட்டத்தரணியான சந்தருவன் குமாரசிங்க என்ற இளைஞன் இன்று காலை விமான நிலைய காவல்துறையினரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

அவர் விமான நிலைய காவல்துறைக்கு வந்தபோது, ​​​​வேறு சில வழக்கறிஞர்களும் அங்கு வருகை தந்துள்ளனர்.

இதேவேளை, விமான நிலையத்தில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையை பதிவு செய்த குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் மூவரின் வாக்குமூலங்களையும் கட்டுநாயக்க காவல்துறையினர் நேற்று (05) மாலை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான தேசம்திரை காணொளியை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.. !

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *