குடும்ப வன்முறைகள் தொடர்பில் அறிவிக்க புதிய தொடர்பாடல் இலக்கத்தை அறிமுகம் செய்துள்ள குடும்ப சுகாதார பணியகம் !

குடும்பங்களில் இடம்பெற்றுவரும் வன்முறைகளைத் தடுக்கும் விதமாக மிது பியச’ பிரிவுக்கு விசேட தொலைபேசி இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளதாகக் குடும்ப சுகாதார பணியகம் அறிவித்துள்ளது.

‘070 2 611 111‘ என்ற குறித்த தொலைபேசி இலக்கத்தின் ஊடான எந்த நேரத்திலும் அழைப்பினை ஏற்படுத்தி குடும்பத்தில் இடம்பெறும் வன்முறைகள் குறித்து தெரியப்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதேவேளை ”குடும்பங்களில் வன்முறைகள் அதிகரிப்பதற்கு கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் சமூக ஊடகங்களின் பாவனையே பிரதான காரணமாக அமைந்துள்ளதாக” களுபோவில வைத்தியசாலையின் மித்ரு பியசவுக்குப் பொறுப்பான வைத்திய அதிகாரி ஹேஷானி கருணாதிலக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *