4000 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயினுடன் நீண்ட நாள் மீன்பிடி படகில் பயணித்த 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் போதைப்பொருள் பிரிவினரும் கடற்படையினரும் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இன்று(22) காலை தேவேந்திரமுனை மீன்பிடி துறைமுகத்தை வந்தடைந்த குறித்த படகை சோதனையிட்ட போது, அதிலிருந்து சுமார் 200 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.