15

15

“அமேசன் இணைய அங்காடியால் விற்கப்பட்ட, “ஸ்ரீலங்கா சிங்க வாசல் விரிப்பு” , ஒரு சீன தயாரிப்பு. ஆகவே “மூடிக்கொண்டு” இருக்கிறார்கள்.” – மனோகணேசன் நகைப்பு !

அமேசன் இணையத்தளத்தில் இலங்கையின் தேசிய கொடி கால்துடைப்பானாக விற்பனைக்கு வந்தமை தொடர்பில் இலங்கை அரசாங்கம் தனது கடுமையான ஆட்சேபனையை தெரிவித்த நிலையில் அது இடைநிறுத்தப்பட்டது.

இந்தநிலையில் அந்த விற்பனை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தனது முகநூல் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.

அதில் அவர் தெரிவித்துள்ளதாவது,

தமிழில் தேசிய கீதம் இசைக்க தடை- மனோ கணேசன் எதிர்ப்பு - தமிழ்க் குரல்

நல்லவேளை.., அமேசன் இணைய அங்காடியால் விற்கப்பட்ட, “ஸ்ரீலங்கா சிங்க வாசல் விரிப்பு” , ஒரு சீன தயாரிப்பு. ஆகவே “மூடிக்கொண்டு” இருக்கிறார்கள். தற்செயலாக இதொரு “இந்திய” நிறுவனமாக இருந்திருந்தால் என்னென்ன நடந்திருக்கும் என கற்பனை செய்தால்.?

 

 

ஆமதுரு தேசிய வீரர்கள் இந்திய தூதகத்தை நோக்கி ஊர்வலம்.

நாடாளுமன்றில் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, காட்டுக்கூச்சல்

இந்திய மற்றும் தமிழ் தந்தை-தாய்மார்களை பற்றி இராவண பல, சிங்கலே, காவியுடை பயங்கரவாதி கும்பல்கள் நாடெங்கும் சந்திக்கு சந்தி ஆர்ப்பாட்டம்.

தலையில் சுகமில்லாத ஏதாவது ஒரு ஜந்து சி.ஐ.டிக்கு சென்று இந்திய பிரதமர் மோடிக்கு எதிராக புகார்.

இந்தியாவை விரும்பும் போது தாங்கள் “வடஇந்திய பரம்பரை” , வெறுக்கும் போது அது “தமிழ் எதிர்ப்பு” என்ற இவர்களது வழமைக்கு இணங்க, தமிழ் எதிர்ப்பு கோஷம்.

வேறு என்ன? என பதிவிட்டுள்ளார்.

“மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான தீர்மானம் இதுவரை எடுக்கப்படவில்லை” – அமைச்சர் சரத் வீரசேகர

“மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான தீர்மானம் இதுவரை எடுக்கப்படவில்லை” என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்றதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

புதிய அரசமைப்பு தயாரிக்கப்பட்டு வருகின்றது. எனவே, புதிய அரசமைப்பின் பிரகாரம் மத்திய அரசுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கி அதன் பின்னரே மாகாண சபைத் தேர்தலை நடத்துவதே சிறப்பாக இருக்கும் எனவும் சரத்வீரசேகர  தெரிவித்துள்ளார்.

இதே நேரம் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன அவர்கள் இது தொடர்பில் கூறும்போது “கடந்த அரசு மாகாண சபைத் தேர்தல்களை நடத்தும் சட்டங்களை மாற்றி அமைத்துள்ளது. அது சட்டவிரோதமானது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே, சட்டத்தில் மாற்றம் செய்யாமல் தேர்தலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.எனினும், மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கு எதிர்பார்க்கின்றோம் தேர்தலை நடத்துவதற்கு நாடாளுமன்ற ஒப்புதல் பெறப்பட வேண்டும் என தெரிவித்துள்ளமையும் நோக்கத்தக்கது.

“அம்பிகையின் உண்ணாவிரதம் கவனிக்கப்படாது வீண்போகவில்லை” – பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் !

“அம்பிகையின் உண்ணாவிரதம் கவனிக்கப்படாது வீண்போகவில்லை” என்று பிரிட்டன் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சேம் டெர்ரி தெரிவித்துள்ளார்.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரி லண்டனில் 16 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் அம்பிகை செல்வகுமாருக்கு ஆதரவாக காணொளியொன்றை வெளியிட்டுள்ள அவர் அந்தக்காணொளியிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

இலங்கை அரசால் மேற்கொள்ளப்படும் அநீதிகள் மற்றும் மனித உரிமை மீறல்களை மிக உயர்ந்த மட்டத்துக்குக் கொண்டு செல்லத் தாம் நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்டனில் ஆயிரக்கணக்கான இலங்கைத் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் தான் பெருமை அடைகின்றார் எனவும், இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அவர்கள் தன்னுடன் அடிக்கடி கதைக்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அம்பிகையின் உண்ணாவிரதம் கவனிக்கப்படாது வீண்போகவில்லை என்றும் பிரிட்டன் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சேம் டெர்ரி மேலும் தெரிவித்துள்ளார்.