இலங்கை இராணுவ சேவைக்கு நாட்டின் சகல பாகங்களிலிருந்தும் முப்பத்தையாயிரம் பேரை இணைத்துக்கொள்வதற்கான நேர்முகப்பரீட்சை நடைபெற்றுவருகிறது.
இத்திட்டத்தின்கீழ் கிழக்கு மாகாணத்திலுள்ள இளைஞர் யுவதிகளை இராணுவ சேவையில் இணைப்பதற்கான நேர்முகப்பரீட்சை நேற்றையதினம் (14.11.2020) மட்டக்களப்பு ஏறாவூர் நகர் பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.
சிங்கள தமிழ் மற்றும் முஸ்லிம் ஆகிய மூவினங்களையும் சேர்ந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் இராணுவ சேவை நேர்முகப்பரீட்சைக்குச் சமுகமளித்திருந்தனர்.
சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் இந்த நேர்முகப்பரீட்சையை நடாத்தினர்.
இராணுவ படையில் பணியாற்ற விரும்பும் இளைஞர் யுவதிகளை இன மற்றும் பிரதேச வேறுபாடின்றி இணைத்துக்கொள்ளும் நோக்குடன் இத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.