உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

“தற்போதைய அரசு இந்தியாவுக்கு எதிராகச் செயற்பட்டு இந்தியாவை கோபப்படுத்துவதற்காகச் செயற்படுகின்றார்கள்” – சி.வி.விக்னேஸ்வரன்

“தற்போதைய அரசு இந்தியாவுக்கு எதிராகச் செயற்பட்டு இந்தியாவை கோபப்படுத்துவதற்காகச் செயற்படுகின்றார்கள்” எனத் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் மூன்று தீவுகள் சீன நிறுவனம் ஒன்றுக்கு மின்சக்தி உற்பத்
திக்கு வழங்கப்பட்டுள்ளமை தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“அண்மையில் ஒரே நாளில் இரு வேறு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. ஒரே நாளில் அரசு இரண்டு வேறுபட்ட தீர்மானங்களை எடுத்துள்ளது. கிழக்கு முனையத்தை இந்தியாவுக்குக் கொடுக்க முடியாது என அறிவித்துள்ளது.

அதேபோல வடக்கு மாகாணத்தில் உள்ள மூன்று தீவுகளில் நெடுந்தீவு, அனலைதீவு,
நயினாதீவு ஆகிய மூன்றையும் சீனக் கம்பனிக்கு மின்சக்தி தயாரிப்பதற்காக கொடுப்பதாகச் சொல்லி இருக்கின்றார்கள். இது மிகவும் பாரதூரமான விடயமாகும்.

முதலாவது இந்தியாவுக்கு கிழக்கு முனையத்தைக் கொடுக்காமை சம்பந்தமாக இந்தியா பார்த்துக்கொள்ளும். ஆனால் வடக்கு மாகாணத்திலுள்ள மூன்று தீவுகளைக் கொடுப்பது என்பது எமது வடமாகாண பாதுகாப்புக்கு மிகவும் பாரதூரமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது
எனது கருத்து.

தற்போதைய அரசு இந்தியாவுக்கு எதிராகச் செயற்பட்டு இந்தியாவை கோபப்படுத்துவதற்காகச் செயற்படுகின்றார்கள். 13ஆவது திருத்தச் சட்டத்தின்படி எமது பகுதி காணிகளை ஜனாதிபதி வழங்குவதாக இருந்தால்கூட அது மாகாண சபையின் ஊடாக செய்யப்பட வேண்டும் என்று இருக்கின்றது.

எனினும் மாகாண சபையுடன் எந்தவித ஆலோசனையும் நடத்தாமல் அதற்குப் பதி
லாக ஆளுநரின் ஊடாக அதற்குரிய அனுமதியைப் பெற்றுச் செய்வது மிகவும் சட்டத்துக்கு முரணானது.

எமது தமிழ்ப் பிரதிநிதிகளும் இது தொடர்பில் தமது தீர்மானத்தைத் தெரிவிக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது. எதிர்காலத்தில் எமது சந்ததியினருக்கு இதனால் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய நிலை காணப்படுகின்றது.

இந்தியாவிலிருந்து 49 கிலோ மீற்றர் தூரத்திலே உள்ள தீவுகளை இவ்வாறு வேறு
ஒரு நாட்டுக்குக் கொடுப்பது என்பது பாரதூரமான விடயமாகும். அதேபோல் இலங்கை அரசு இதனைத் தெரியாமல் செய்யவில்லை.தெரிந்துகொண்டுதான் செய்கின்றது.

அதாவது ஜெனிவாவில் இந்தியாவுடைய ஆதரவைத் தாங்கள் பெறுவதற்காக
இவற்றை நிறுத்துவதாக இருந்தால் நீங்கள் எங்களுக்கு ஜெனிவாவில் நன்மைகள்
பெற்றுத் தர வேண்டும் என்ற அடிப்படையிலும் இவற்றைச் செய்கின்றார்கள் என்பது எமக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது” என்றார்.

“விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர்கள் என குற்றம்சாட்டப்படுபவர்களை இலங்கை இராணுவம் அவர்கள் வெள்ளை கொடியை காண்பித்தவேளையிலும் சுட்டுக்கொல்வதை பார்த்திருக்கின்றோம்” – நவநீதம் பிள்ளை

“விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர்கள் என குற்றம்சாட்டப்படுபவர்களை இலங்கை இராணுவம் அவர்கள் வெள்ளை கொடியை காண்பித்தவேளையிலும் சுட்டுக்கொல்வதை பார்த்திருக்கின்றோம்” என முன்னாள் ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி ஆறுமாதங்களும் பல முறை சர்வதேச தொலைக்காட்சிகளில் வெளியாகியுள்ளன. நாங்கள் பயங்கரவாத அமைப்பான விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர்கள் என குற்றம்சாட்டப்படுபவர்களை இலங்கை இராணுவம் அவர்கள் வெள்ளை கொடியை காண்பித்தவேளையிலும் சுட்டுக்கொல்வதை பார்த்திருக்கின்றோம்.
தமிழ்பொதுமக்கள் மீதான கடுமையான விமான குண்டுவீச்சுகளையும் அவர்களின் வீடுகள் மருத்துவமனைகள் கோவில்கள் அடைக்கலம் கோரிய இடங்கள் அழிக்கப்பட்டதையும் நாங்கள் பார்த்திருக்கின்றோம்.
பயங்கரவாதிகள் என குற்றம்சாட்டப்படுபவர்கள் கைதுசெய்யப்பட்ட பின்னரும் இந்த தாக்குதல் இடம்பெற்றது. காயமடைந்தவர்களிற்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தவேளை எறிகணை தாக்குதலிற்கு உள்ளான மருத்துவமனைகளின் மருத்துவர்களின் உதவிக்கான இறுதிக்குரலை நாங்கள் செவிமடுத்திருக்கின்றோம்.

மனித உரிமை பேரவை உறுதியான விதத்தில் செயற்பட்டு இலங்கையில் நீதி மற்றும் பொறுப்புக்கூறலிற்கான மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும்.  தமிழர்களிற்கு எதிரான கடுமையான மனித உரிமை மீறல் குற்றவாளிகளை எந்த வித தயக்கமும் இன்றி பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்தவேண்டும் எனவும்  கோத்தாவின் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் சட்டத்தின் ஆட்சி தோற்கடிக்கப்பட்ட மக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்த சர்வதேச தராதரங்கள் ஆகியவற்றின் மீதான யுத்தமாக மாற அனுமதிக்க கூடாது எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“மக்களை கூடுதலாக கொன்றது புலிகள்தான் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குறிப்பிட்டதுடன் அவர்களையும் விசாரிக்க வேண்டும் என குறிப்பிட்டார்” –

“மக்களை கூடுதலாக கொன்றது புலிகள்தான் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குறிப்பிட்டதுடன் அவர்களையும் விசாரிக்க வேண்டும் என குறிப்பிட்டார்” என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிறுவர்களாக ஆயுதம் ஏந்தியவர்களை எவ்வாறு விசாரிப்பது என அன்று இடம்பெற்ற மனித உரிமை அமர்வில் எடுக்கப்படும் தீர்மானம் தொடர்பில் நவநீதம்பிள்ளைக்கு நான் கடிதம் அனுப்பியிருந்தேன். 40 ஆயிரம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தியிருந்தார்கள். பல்வேறு காரணங்கள் காணப்பட்டிருந்தது. ஆனால் அவர்களையும் விசாரி என்ற தீர்மானத்தை மீள் பரிசீலணை செய்ய வேண்டும் என அவரிடம் குறிப்பிட்டிருந்தேன்.

மக்களை கூடுதலாக கொன்றது புலிகள்தான் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குறிப்பிட்டிருந்தார். அது ஊடகங்களில் பிரதான தலைப்பு செய்தியாகவும் வந்திருந்தது. விசாரிப்பதென்றால் அவர்களையும் விசாரிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் 2012ம் ஆண்டு மார்ச் மாதம் எடுக்கப்படவிருந்த தீர்மானத்தில் 8வது சரத்தில் குறிப்பிடப்படவிருந்த மேற்குறித்த விடயம் தொடர்பில் மாற்றத்தினை ஏற்படுத்துமாறு நான் நவநீதம் பிள்ளையிடம் குறிப்பிட்டிருந்தேன் என அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை யுத்த களத்தில் இருந்த இராணுவத்தினருக்கு கட்டளை இட்டவர்களையே விசாரித்திருக்க வேண்டும். அவ்வாறெனில் கட்டளையிட்டவர் சரத் பொன்சேகா. மாறாக நடைபெற்ற தேர்தலில் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

ஜெனிவாவிற்கு நாங்கள் போகாவிட்டால் துரோகிகளோ? என ஒரு கட்டத்தில் சுமந்திரனும் சிறிதரனும் கேள்வி எழுப்பியிருந்தார்கள். நட்பு நாடுகள் சொல்லிதான் ஜெனிவாவிற்கு போகவில்லை என இன்று கூறுகின்றனர். எமது நாட்டில் சுனாமி உள்ளிட்ட எவ்வாறான நிலை ஏற்பட்டாலும் உடனடியாக முன்வருவது இந்தியாதான். சுனாமி நேரத்தில் இந்தியாவிலும் இழப்புக்கள் ஏற்பட்ட நிலையில் உடனடியாக இந்தியாதான் வந்தது. இவ்வாறான நிலையில் இந்தியாவை ஒரு சொல் கேட்டிருந்தால் இந்தியா வந்திருக்கும். ஆனால் எம்மவர்கள் கேட்கவில்லை .

இப்போது இந்தியாவிற்கு எதிரான வேலைகள் இடம்பெறுகின்றது. 3 தீவுகளை அரசு ஒரு நாட்டுக்கு கொடுக்க போகின்றது. அவ்வாறு நட்பு நாட்டுக்கு கொடுக்கும்போது, அந்த மூன்று தீவுகளும் அவர்களின் எதிரி நாட்டையே பார்த்துக்கொண்டுள்ளது. அதனால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் மக்களுக்கு தெரியும். அதேபோல் இலங்கை அரசுக்கு தெரிய வேண்டும். இந்தியாவிற்கு நிச்சயம் அது தெரியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கச்சை தீவை இலங்கைக்கு கொடுத்தபோது இந்தியாவில் தமிழகம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் எதிர்ப்பு ஏற்பட்டது. அதனையும் மீறியே கொடுக்கப்பட்டது. கச்சை தீவை எழுதி கொடுத்த நாடு இப்​போது கச்சை தீவை தா என்று கேட்டால் என்ன சொல்வீர்கள் .?

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் நட்பை வழங்குவதற்கான எதிரகாலத்தில் பிரச்சினைகள் ஏற்படும் என்று தெரிந்தும் கச்சை தீவை அவர் வழங்கியிருந்தார். அந்த மூன்று தீவுகளையும் வழங்குவதால் பாரிய பாதிப்பு காணப்படும் நிலையில் ஏன் இந்த அரசாங்கம் இவ்வாறு செயற்படுகின்றது என்று தெரியவில்லை.

இந்த அரசாங்கத்தை கண்டிக்க எனக்கு என்ன தகுதி இருக்கின்றது? அந்த மூன்று தீவிலும் உள்ள மக்களிற்கான பாதுகாப்பு என்ன? ஓர் போர் மூண்டால் மூன்று தீவுகளும் பஸ்பமாகிவிடும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டிருந்தார்.

“இலங்கையிலும் ஆட்சியமைக்க இந்தியாவின் பா.ஜ.க திட்டம்” – வெடித்தது புதிய சர்ச்சை !

இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு நேபாளத்திலும் இலங்கையிலும் பாரதிய ஜனதா அரசாங்கத்தினை அமைக்கும் திட்டமுள்ளது என திரிபுரா முதலமைச்சர் பிப்லாப் டெப் தெரிவித்துள்ள கருத்தினால் சர்ச்சை உருவாகியுள்ளது.

இந்திய உள்துறை அமைச்சர் இலங்கையிலும் நேபாளத்திலும் பா.ஜ.க அரசாங்கத்தை அமைப்பதற்கான திட்டம் குறித்து தெரிவித்தார் என பிப்லாப் டெப் தெரிவித்ததாக ஈஸ்ட் மொஜொ தெரிவித்துள்ளது.

சனிக்கிழமை திரிபுராவிற்கு விஜயம் மேற்கொண்ட இந்திய உள்துறை அமைச்சர் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வெற்றிபெற்ற பின்னர் பா.ஜ.கவிற்கு இலங்கையிலும் நேபாளத்திலும் அரசாங்கத்தை அமைக்கும் எண்ணமுள்ளது என குறிப்பிட்டார் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

நேற்றைய சந்திப்பின்போதுபா.ஜ.க பல மாநிலங்களில் ஆட்சியமைத்துள்ளது குறித்து தெரிவிக்கப்பட்டபோது இலங்கையும் நேபாளமும் மிச்சமிருக்கின்றன என அமித்சா தெரிவித்தார்.

நாங்கள் இலங்கையிலும் நேபாளத்திலும் நாங்கள் கட்சியை விஸ்தரிக்கவேண்டும் அங்கு ஆட்சியை அமைப்பதற்காக வெற்றிபெறவேண்டும் என தெரிவித்தார் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

திரிபுரா முதலமைச்சர் தெரிவித்துள்ள இந்த கருத்து குறித்து மத்திய அரசாங்கம் விளக்கம் அளிக்கவேண்டும் என திரிபுராவின் எதிர்கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. முதலமைச்சருக்கு ஜனநாயகம் மற்றும் அரசமைப்பு குறித்து எதுவும் தெரியாது என குறிப்பிட்டுள்ள எதிர்கட்சி அமித்சாவின் கருத்துக்கள் வெளிநாடு ஒன்றின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கு சமம் என குறிப்பிட்டுள்ளது.

 

நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பல கட்டங்களில் கொவிட் தடுப்பூசி !

நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பல கட்டங்களில் கொவிட் தடுப்பூசி செலுத்த பல்கலைக்கழக மானிய ஆணையகம் நடடிவடிக்கை எடுத்துள்ளது.

அதன் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, இந்த திட்டம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

இதேவேளை கண்டி, பெரதெனிய பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் எட்டு மாணவர்கள் கொரோனா தொற்றுக்கு சாதகமாக சோதனை செய்துள்ளதாக பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பரீட்சைக்கு அமர திட்டமிடப்பட்ட சுமார் 300 மாணவர்கள் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர், அவர்களில் 8 பேர் கொவிட் 19 க்கு நேர்மறை சோதனை செய்ததாக பல்கலைக்கழக மருத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

இந் நிலையில் பரீட்சை ஒத்திவைக்கப்பட்டு, கொரோனா தொற்று மாணவர்களுடன் தொடர்புடையே மேலும்  40 மாணவர்கள் தனிமைப்படுத்தலின் கீழ் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

“இலங்கை இராணுவத்தினரைக் காட்டிக்கொடுப்பதற்கோ அவர்களுக்கு ஆபத்து ஏற்படுவதற்கோ இடமளிக்கமாட்டேன்” – சரத்பொன்சேகா

“இலங்கை இராணுவத்தினரைக் காட்டிக்கொடுப்பதற்கோ அவர்களுக்கு ஆபத்து ஏற்படுவதற்கோ இடமளிக்கமாட்டேன்” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானம் தொடர்பில் பெலியத்த பகுதியில்  ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

தேசிய கொள்கைகளுக்கமைய எந்தவொரு அரசும் நாட்டின் இராணுவத்தினரைக் காட்டிக்கொடுப்பதில்லை.

குறிப்பாக வடக்கிலுள்ள அரசியல்வாதிகள் வாக்குகளை எதிர்பார்த்தே அவர்களுடைய நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றனர். அவற்றை வைத்துக்கொண்டு தெற்கில் இனவாதத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியமில்லை”என்றார்.

உடலில் பச்சை குத்திaதாக கூறி மாணவர்களை துன்புறுத்தியதாக ஆசிரியர்கள் மீது முறைப்பாடு – வலிகாமத்தில் சம்பவம் !

வலிகாமம் கல்வி வலயத்துக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் தரம் 11ல் கல்வி பயிலும் மாணவர்கள் ஆசிரியர்கள் சிலரால் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் அலுவலகத்தில் முறைப்பாடு செய்யபட்டுள்ளது.

குறித்த பாடசாலையில் தரம் 11இல் பயிலும் மாணவன் ஒருவன் உடலில் பச்சை குத்தியுள்ளதாக ஆசிரியர்கள் சிலரால் அண்மையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் தரம் 11இல் பயிலும் 70 ஆண் மாணவர்களை பாடசாலை வளாகத்திலுள்ள மறைவான இடம் ஒன்றுக்கு  அழைத்த ஆசிரியர்கள்,  வலுக்கட்டாயமாக  ஆடைகளை களையுமாறு அவர்களை அறிவுறுத்தியுள்ளனர்.
ஆசிரியர்களின் அறிவுறுத்தலை மீற முடியாமல் தாம் சித்திரவதைக்கு உள்ளாகியதாக மாணவர்கள் தமது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.

தாம் உளரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தமக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்து மாணவர்களால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் முறைப்பாடு கடந்த 11ஆம் திகதி வியாழக்கிழமை கிடைத்தது. சம்பவம் தொடர்பில் மாகாண கல்வி அமைச்சிடம் விளக்கமளிக்குமாறு எழுத்துமூலம் கோரப்பட்டுள்ளது என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் தெரிவித்தார்.

“காணாமல்போனோர் அலுவலகத்தை நடத்தி  தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு அரச நிதி ஒதுக்குவதை அரசால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது” – சரத் வீரசேகர

“காணாமல்போனோர் அலுவலகத்தை நடத்தி  தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு அரச நிதி ஒதுக்குவதை அரசால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது” என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

இராணுவத்தைக் கொன்ற, தேசிய பாதுகாப்பைப் பலவீனப்படுத்திய நபர்களுக்கு நட்டஈடு கொடுக்க நாம் அனுமதிக்க முடியாது. பயங்கரவாதிக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுத்து தேசத்தைக் காப்பாற்றியவர்களைத் தண்டிக்கக் கூறுவதில் என்ன நீதி உள்ளது என நாம் கேள்வி கேட்கின்றோம்.

எமக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நாம் பொறுப்புக்கூறலில் இருந்து விடுபட்டுள்ளதாகக்  குறிப்பிட்டு தொடர்ச்சியாக எமக்குப் பாடம் கற்பிக்கவே ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு முயற்சித்து வருகின்றது.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் சிறுவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்ட போதும், பொதுமக்களைப் பணயம் வைத்துப் போர் நடத்தப்பட்ட போதும் மனித உரிமைகள் குறித்து பேசாதவர்கள் இன்று இராணுவம் மீதான குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர்.

அதேபோல் எமது தேசிய விசாரணை பொறிமுறைகளுக்கு சர்வதேசம் இடமளிக்கவில்லை. உள்ளக அறிக்கைகளை நாம் முன்வைத்தால் அது பக்கச்சார்பானது என நிராகரிக்கின்றனர். அப்படியென்றால் எவ்வாறு நாம் முகங்கொடுப்பது?

இந்தநிலையில், இம்முறை ஐ.நா. மனித உரிமைகள் சபையில் பிரிட்டன் தலைமையில் ஐந்து நாடுகள் கொண்டுவரும் பிரேரணையை நிராகரித்து, இலங்கை  புதிய பிரேரணை ஒன்றை முன்வைக்கும் வாய்ப்புகளே அதிகமாக உள்ளன” என்றார்.

“இலங்கையில் இறுதிப்போரில் கொல்லப்பட்டவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகளே தவிர பொதுமக்கள் அல்லர்” – அமைச்சர் சரத்வீரசேகர

“இலங்கையில் இறுதிப்போரில் கொல்லப்பட்டவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகளே தவிர பொதுமக்கள் அல்லர் ” என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரானது மனித உரிமைகள் சட்டத்தின் கீழ் கண்காணிக்கப்படாது, மாறாக மனிதாபிமான சட்டத்தின் கீழேயே கண்காணிக்கப்பட வேண்டும்.

இந்தச் சட்டத்துக்கு அமைய விடுதலைப்புலிகளுக்கு உதவிய அனைவரும்‘விடுதலைப்புலிகள்’ என்றே கருதப்படுவார்கள். இலங்கையில் இடம்பெற்றது உள்நாட்டு ஆயுதப்போராட்டம். விடுதலைப்புலிகளுக்கென இராணுவக்  கட்டமைப்பொன்று இருந்ததுடன் கடற்படை, விமானப்படைகள் என்பனவும் இருந்தன.

அத்தோடு தமக்கான தேசமொன்று அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. தொடர்ச்சியாக போராடக்கூடிய தன்மையும் அவர்களிடம் காணப்பட்டது.
மேலும் இரு நாடுகளுக்கு இடையில் நடக்கும் சண்டையாக இல்லாது, ஒரு நாட்டுடன் நடத்தும் போராட்டத்துக்கு ஒப்பானது இந்த ஆயுதப் போராட்டம்.

இந்தப் போராட்டம் தொடர்பில் மனிதாபிமான சட்டமே நடைமுறைப்படுத்தப்படவேண்டுமே தவிர மனித உரிமை மீறல் சட்டமல்ல. அதனடிப்படையில் மனிதாபிமான சட்டத்தில் விடுதலைப்புலிகளுக்கு உதவிய அனைவருமே விடுதலைப்புலிகளே. அதன்படி இறுதிப்போரில் கொல்லப்பட்டவர்கள் விடுதலைப்புலிகளே தவிர பொதுமக்கள் அல்லர்.

இதேவேளை, இந்தச் சட்டத்தை முதலில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் தெரிந்துகொள்ள வேண்டும்- என்றார்.

கொரோனா நிவாரண நிதிக்காக காத்திருந்து கிடைக்காததால் ஏமாற்றமடைந்த பாராளுமன்ற உறுப்பினர் !

வறுமையையும் கஸ்டங்களையும் சந்தித்துள்ளமையினால் மக்களின் முகபாவத்தினை வைத்தே அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை என்னால் அறிந்துகொள்ள முடியுமென வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் தெரிவித்துள்ளார்.

வவுனியா- மணிபுரத்தில் இடம்பெற்ற சந்தை கட்டட திறப்பு விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிகழ்வில் கு.திலீபன் மேலும் கூறியுள்ளதாவது,

Image result for கு.திலீபன்

“மக்கள் நலன் சார்ந்த பல திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்து செல்கின்றபோதிலும் பல இடர்பாடுகளை சந்தித்த வண்ணமே உள்ளது.

இதற்கு காரணம், இந்த அரசாங்கம் மற்றும் அரசாங்கத்தினைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிரந்தரமாக அந்த ஆசனத்தில் இருந்து விடுவார்களோ என்ற அச்சத்தில் அவதூறுகளை சிலர் பரப்பி வருகின்றனர். ஆனால் இத்தகைய அவதூறுகளினால் அரசாங்கத்திற்கு எந்ததொரு பாதிப்பும் ஏற்படாது.

இதேவேளை வறுமையையும் கஸ்டங்களையும் சந்தித்தே நான் இந்த நிலைமைக்கு வந்துள்ளேன்.

கொரோனா தாக்கம் அதிகமாக காணப்பட்ட நிலையில் நிவாரணம் வழங்கியிருந்தார்கள். அப்போது எனது குடும்பத்தின் பதிவு வவுனியா பிரமனாளங்குளத்தில் இருந்தது.

அந்த கிராமத்தில் பாதிரியார் ஒருவர் நிவாரண பொதி வழங்குகின்றார் என தகவல் கிடைத்து நானும் எனது மனைவியும் மோட்டார் சைக்கிளில் அங்கு சென்றோம்.

அந்த பொதிகளை பார்த்தபோது பெரிய பொதியாக இருந்தது. அதனால் நானும் மனைவியும் சென்ற மோட்டார் சைக்கிளில் இந்த பொதியை கொண்டு செல்ல முடியாது இருக்கும் என எண்ணிக்கொண்டே நிவாரணம் கிடைக்கும் என அருகில் சென்ற எமக்கு அது கிடைக்கவில்லை.

பிரமனாளங்குளத்தில் பதிவு இருந்தாலும் வவுனியா நகரில் இருக்கின்றமையால் பொதியை தரமுடியாது என கிராம சேவகர் தெரிவித்துவிட்டார். எனினும் நான் முரண்படவில்லை. ஏமாற்றத்துடன் திரும்பி வந்தோம். வறுமையையும் கஸ்டங்களையும் சந்தித்தே நான் இந்த நிலைக்கு வந்திருந்தேன்.

ஆகவே மக்களின் முகபாவத்தினை வைத்தே மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை நான் அறிந்துகொள்வேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.